Wednesday, September 9, 2015

ரஜினிக்கு பின்னர் இனி அஜித் தான் சொல்லப்படுவதற்கான காரணம் இதோ!





தற்போது அஜித் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் அஜித் கொல்கத்தா சென்றிருந்தார். அங்கிருப்பவர்களுக்கு இவரை அடையாளம் தெரியாததால் சாலையோர கடைகளுக்கும் சென்று விருப்பப்பட்டதை வாங்கி சுதந்திரமாக சுற்றித்திரிந்தாராம். படப்பிடிப்பில் நடிகர்கள் எல்லாரும் நாற்காலியில் அமர்ந்திருக்க அஜித்தோ பிளாட் பாரத்தில் அமர்ந்து அடுத்து எடுக்க வேண்டிய காட்சி பற்றி இயக்குனருடனும் தொழில்நுட்ப கலைஞர்களுடனும் தீவிரமாக விவாதிப்பாராம். இதைப்பார்த்தவர்கள் சென்னைக்கு வந்த பிறகு அஜித் புராணத்தை கோடம்பாக்கம் முழுவதும் பரப்பி வருகிறார்களாம். தன்னடக்கம் உள்ளவர்களால் மட்டுமே இப்படி செய்ய முடியும் எனவும் போன தலைமுறைக்கு ரஜினிஇ இந்த தலைமுறைக்கு அஜித் என்றும் சல சலக்கிறார்களாம்.


No comments:

Post a Comment