Sunday, October 4, 2015

புலி படத்திற்காக உயிரை விட்ட விஜய் ரசிகர்கள்..!

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘புலி’ படம் உலகம் முழுவதும் அக்டோபர் 1ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாவதற்கு முந்தைய இரவு அனைத்து தியட்டர்களிலும் களைகட்டியது. ஆங்காங்கே ஆரத்தி, பாலாபிஷேகம், அழகு குத்துவது என அமர்கலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தாம்பரம் அருகேயுள்ள மணிமங்கலத்தை சேர்ந்த விஜய் ரசிகர்களான உதயகுமார் மற்றும் சௌந்தரராஜ் (இருவரின் வயதும் 22) இருவரும் ‘புலி’ படத்தை வரவேற்கும் வகையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு இடமாக போஸ்டரை ஒட்டிக் கொண்டே மோட்டார் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது வண்டலூர் சாலையில் வேகமாக வந்த லாரி இவர்கள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த இருவரும் லாரி டயரில் சிக்கி பரிதாபமாக இறந்துள்ளனர். ஆனால் அந்த லாரி டிரைவரோ லாரியை நிறுத்தாமல் ஓட்டிச் சென்றுள்ளார். இதையடுத்து மணிமங்கலம் போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. -

No comments:

Post a Comment